சாத்தான்குளம் சம்பவம் : ஜீப் டிரைவர் உட்பட 3 பேரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை
திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு, சாத்தான்குளம் காவல் ஆய்வாளரின் ஜீப் டிரைவர் ஜெயசேகர் ஆஜரானார்.
திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு, சாத்தான்குளம் காவல் ஆய்வாளரின் ஜீப் டிரைவர் ஜெயசேகர் ஆஜரானார். மேலும், காவலர் அழகு மாரிசெல்வம், மேலும் ஒரு காவலரிடமும், காவல் நிலையத்தில் துப்புரவு பணி செய்யும் வேல்முருகன் என்பவரிடமும் , மாஜிஸ்திரேட் தீவிர விசாரணை மேற்கொண்டார். இதனிடையே, தவறான மருத்துவ சான்றிதழ் வழங்கியது கிரிமினல் குற்றம் இல்லை என்பதால் பெண் மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் எனவும், இரண்டாவது முறையாக ஜெயராஜ், பென்னிக்ஸ் உறவினர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார்.
Next Story