சாத்தான்குளம் : தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் மேலும் 3 போலீசார் கைது

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், இரண்டு எஸ்.ஐ உள்பட முக்கிய போலீசார் அனைவரும் கைது என சிபிசிஐடி ஐஜி சங்கர் உறுதிபடுத்தியுள்ளார்.
x
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், இரண்டு எஸ்.ஐ உள்பட முக்கிய போலீசார் அனைவரும் கைது என சிபிசிஐடி ஐஜி சங்கர் உறுதிபடுத்தியுள்ளார். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேர் மீது கொலை மற்றும் தடயங்களை அழிக்க முயன்றதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கைதான சாத்தான்குளம் எஸ்.ஐ. ரகுகணேஷ், தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.  ஆய்வாளர் ஸ்ரீதர், மற்றொரு எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்