பேருந்து நிலையத்தில் தனியாக காத்துக்கொண்டிருந்த வெளிநாட்டு பெண் - இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்

சேலத்தில் தென்ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஃபெவேர்(favour) என்ற பெண் பெங்களூரிலிருந்து சேலம் வந்துள்ளார்.
பேருந்து நிலையத்தில் தனியாக காத்துக்கொண்டிருந்த வெளிநாட்டு பெண் - இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்
x
சேலத்தில் தென்ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஃபெவேர்(favour) என்ற பெண் பெங்களூரிலிருந்து சேலம் வந்துள்ளார். சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால், திருச்செங்கோடு பகுதிக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து, அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது தன்னை அழைத்துச் சென்ற உறவினர்கள் வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து நேற்று இரவு முழுவதும் காவலர் ஒருவர் அவருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். காலை வரை அவரை அழைத்துச் செல்ல யாரும் வராததால் காவல்துறையினர் அவரை பத்திரமாக அவரது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்