என் வீழ்ச்சியில் மகிழ்ச்சியா? - சரத்குமார்

தன்னைப் பற்றி தவறான செய்திகளை பகிரும் சில இணைய தளங்கள் மீது சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
என் வீழ்ச்சியில் மகிழ்ச்சியா? - சரத்குமார்
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , 
தவறான உணமைக்குப் புறம்பான செய்திகளை காட்டுத்தீ போல பரப்பி நீங்கள் அடையும் மகிழ்ச்சி என்றும், .உங்கள் செயலால்  அவர்கள் அடையும் வேதனையில் நீங்கள் பெரும் மகிழ்ச்சி என்று வேதனை தெரிவித்துள்ளார். உங்களுக்கு உணர்வுகளே கிடையாதா, மனசாட்சியை இறக்கி வைத்து விட்டீர்களா? என்று கேள்வி எழுப்பி உள்ள அவர், நான். என் குடும்பம், என் வாழ்க்கை உங்களைப் போன்றவர்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஒருவன் எப்போது வீழ்வான் என்று காத்துக் கொண்டிருக்கும் கூட்டமல்லவா நீங்கள்...  என் வாழ்க்கையின் வேதனைகள்,  என் சகோதரரின் இழப்பு, என் பொருளாதார பின்னடைவு, தோல்விகள், அவதூறுகள் இவைகளையெல்லாம் தாங்கி பிறர் வீழ்ச்சியில் வாழாமல் என் முயற்சியில் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன் நான் என் பயண எல்லையையும், இல்க்கையும் அறிந்தவன் நான் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்