தந்தை, மகன் மரணம் தொடர்பான விசாரணை - தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய டிஎஸ்பியாக ராமநாதன் நியமனம்

நீதித்துறை நடுவர்களை மரியாதை குறைவாக பேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி குமார், சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தந்தை, மகன் மரணம் தொடர்பான விசாரணை - தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய டிஎஸ்பியாக ராமநாதன் நியமனம்
x
நீதித்துறை நடுவர்களை மரியாதை குறைவாக பேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து,  தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி குமார், சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதேபோல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், சாத்தான்குளம் காவல்நிலைய காவலர் மகாராஜனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் காத்திருப்பு  பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஏடிஎஸ்பி குமார் நீலகிரி மாவட்டத்துக்கும், டிஎஸ்பி பிரதாபன் புதுக்கோட்டைக்கும் பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய டிஎஸ்பியாக ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்