ஆட்டிறைச்சி கடையில் சிக்கிய ரூ.61.50 லட்சம் - சூதாட்டத்தில் ஈடுபட்டு சிக்கிய கொள்ளையர்கள்

சென்னையில் செல்போன் திருட சென்ற இடத்தில், கொள்ளையர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போல், 61 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சிக்கியது.
ஆட்டிறைச்சி கடையில் சிக்கிய ரூ.61.50 லட்சம் - சூதாட்டத்தில் ஈடுபட்டு சிக்கிய கொள்ளையர்கள்
x
திருடிய பணத்தை வைத்து அந்த கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டபோது, போலீசாரிடம் சிக்கினர்.கடந்த ஞாயிறு அன்று புளியந்தோப்பு டிகாக்ஸ் சாலையிலுள்ள ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள்  அலுவலத்தின் பூட்டை உடைத்து, 61 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அலுவலக கட்டிடம் மற்றும் அந்த பகுதி முழுவதும்  சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனிடையே,  இதேபோல் பூட்டை உடைத்து திருடும் 13 கொள்ளையர்களை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது  புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சாலமன் என்பவர், சீட்டாட்டத்தில் அண்மைக்காலமாக அதிக பணம் வைத்து சீட்டாட்டம் ஆடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையறிந்த சாலமன், தலைமறைவாகிவிட்டார். அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார், சனிக்கிழமை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்