காதலை முறித்துக்கொண்ட இளம்பெண் - பழிவாங்க பேஸ்புக்கில் புகைப்படம் வெளியிட்ட காதலன்

மயிலாடுதுறை அருகே காதல் முறிவு ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலை முறித்துக்கொண்ட இளம்பெண் - பழிவாங்க பேஸ்புக்கில் புகைப்படம் வெளியிட்ட காதலன்
x
சீர்காழி வட்டம் திருமுல்லைவாசலை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ, அதே பகுதியைச் சேர்ந்த உதயபிரகாசை காதலித்துள்ளார். காதலன் நடவடிக்கை சரியில்லாததால் எட்டு மாத காதலை அவர் முறித்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞன், காதலியோடு எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதோடு, காதலி வீட்டிற்கு சென்று, குடும்பத்தாரை தாக்கியுள்ளார். இதை பார்த்து அவமானம் தாங்க முடியாமல், மனம் உடைந்த இளம்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்