நீதிபதியை அவதூறாக பேசியதாக புகார் - 2 காவல் அதிகாரி உட்பட 3 பேர் மீது நடவடிக்கை
சாத்தான்குளம் சம்பவம் குறித்த விசாரணையின் போது நீதிபதியை அவதூறாக பேசிய புகார் தொடர்பாக கூடுதல் கண்காணிப்பாளர் இன்று காலை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் குறித்த விசாரணையின் போது நீதிபதியை அவதூறாக பேசிய புகார் தொடர்பாக கூடுதல் கண்காணிப்பாளர் டி.குமார், துணை கண்காணிப்பாளர் பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் இன்று காலை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், சாத்தான்குளம் காவலர் மகாராஜனை சஸ்பெண்ட் செய்தும், தென்மண்டல ஐ.ஜி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Next Story