தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி மலைப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 2வது நாளாக கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் , விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் நகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 2 வாரங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கியது.

மதுரை : கொட்டி தீர்த்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை  பெரியார் பேருந்து நிலையம், முனிச்சாலை, கீழவாசல், தெற்குவாசல், சிம்மக்கல், கோரிப்பாளையம் பகுதிகளில் கனமழை பெய்தது. கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

கும்பகோணம் : கனமழை - விவசாயிகள் உற்சாகம்

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  தாராசுரம், அம்மாசத்திரம், திருநாகேஸ்வரம், பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கன மழை கொட்டி தீர்த்தது . இதனால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர், 

திருவிடைமருதூர்: இரண்டு மணி நேரம் கொட்டி தீர்த்த மழை 

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், திருபுவனம்,  வேப்பத்தூர், ஆடுதுறை, அம்மாசத்திரம் தேப்பெருமாநல்லூரில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக  இடைவிடாது பெய்த மாலையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

விருத்தாசலம்: சுமார் ஒரு மணிநேரம் பலத்த மழை

விருத்தாசலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக கனழை பெய்தது. கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் இரு நாட்களாக  மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விருதாசலம்,நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 



Next Story

மேலும் செய்திகள்