சிகிச்சை குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு - தினமும் சராசரியாக 1,800 பேர் பாதிப்பு

சென்னையில் கடந்த 20 நாட்களில் குணமடைந்து வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சிகிச்சை குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு - தினமும் சராசரியாக 1,800 பேர் பாதிப்பு
x
சென்னையில் ஜூன் மாதத்தில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தினமும் சராசரியாக  ஆயிரத்து 800 பேர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சிகிச்சை குணமடைந்து வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.கடந்த 20 நாட்களில் சிகிச்சை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48 புள்ளி 32  சதவீதத்தில் இருந்து 60 புள்ளி 05 சதவீதமாக அதிகரித்துள்ளது குணமடைந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிகிச்சையில்  இருப்பவர்கள் எண்ணிக்கை 50 புள்ளி 72 சதவீதத்தில் இருந்து 38 புள்ளி 45 சதவீதமாக குறைந்துள்ளது.

அதே நேரத்தில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஜீரோ புள்ளி 96 சதவீதமாக இருந்த உயிரிழப்பு தற்போது ஒன்று புள்ளி 5 சதவீதமாக அதிகரித்துள்ளது. சென்னையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகம் கண்டறியப்பட்டு வரும் நிலையில், குணமடைந்து  வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்