ரூ.2000க்கு இ- பாஸ் விற்பனை செய்தது அம்பலம் - சென்னை மாநகராட்சி அதிகாரியிடம் மத்திய குற்றப்பிரிவு விசாரணை

இ-பாஸ் மோசடியில் கைதான சென்னை மாநகராட்சி அதிகாரி வொர்க் ப்ரம் ஹோமில் இருந்தவர்களை வைத்து பெரிய அளவில் திட்டமிட்டு வேலை பார்த்து மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
ரூ.2000க்கு இ- பாஸ் விற்பனை செய்தது அம்பலம் - சென்னை மாநகராட்சி அதிகாரியிடம் மத்திய குற்றப்பிரிவு விசாரணை
x
இ-பாஸ் மோசடியில் கைதான சென்னை மாநகராட்சி அதிகாரி, வொர்க் ப்ரம் ஹோமில் இருந்தவர்களை வைத்து பெரிய அளவில் திட்டமிட்டு வேலை பார்த்து மோசடியில் ஈடுபட்டிருப்பது மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சென்னை மாநகராட்சி இ-பாஸ் அதிகாரி குமரன் உட்பட 5 பேர் ஏற்கனவே கைதான நிலையில் ஒரு இ-பாஸுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்ததாகவும், இதுவரை 100க்கும் மேற்பட்ட போலி பாஸ்களை கார் ஓட்டுநர்களின் உதவியோடு தயாரித்து விற்றதும் தெரியவந்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்