போலீசாரை தகாத வார்த்தையில் திட்டிய முன்னாள் எம்.பி. - சோதனை சாவடியில் வாக்குவாதம்

சேலம் மாவட்ட எல்லையில் இ-பாஸ் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை தகாத வார்த்தையில் திட்டி கைகலப்பில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
போலீசாரை தகாத வார்த்தையில் திட்டிய முன்னாள் எம்.பி. - சோதனை சாவடியில் வாக்குவாதம்
x
கொரோனா தடுப்பு பணியாக ஓமலூரில் போலீசார் இ-பாஸ்  சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த முன்னாள் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் காரில் வந்தபோது காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது, அவர் தான் முன்னாள் எம்.பி. என்று கூற, போலீசார் ஆவணத்தை கேட்டதால், காரிலிருந்து இறங்கி அவர், போலீசாரை தகாத வார்த்தையில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து  இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு முன்னாள் எம்.பி. அர்ஜுனன் பணியில் ஈடுபட்டு வந்த உதவி காவல் ஆய்வாளரை தாக்க, பதிலுக்கு காவல் உதவி ஆய்வாளர் தாக்குகிறார். பின்னர் அங்கிருந்து அர்ஜுனன் காரில் புறப்பட்டு சென்று விடும் காட்சி சமூக வலைகளில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்