ஏடிஎம் இயந்திரம் உடைப்பு - கொள்ளை முயற்சி தோல்வி

கடலூர் அருகே ஏடிஎம்மில் நடைபெற்றுள்ள கொள்ளை முயற்சியை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏடிஎம் இயந்திரம் உடைப்பு - கொள்ளை முயற்சி தோல்வி
x
கடலூர் அருகே ஏடிஎம்மில் நடைபெற்றுள்ள கொள்ளை முயற்சியை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் வெள்ளகேட் பகுதியில் இந்தியா ஒன் என்ற ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை அங்குள்ள ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதில் போலீஸ் விசாரணையில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி மட்டும் நடை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. பணம் இருக்கும் பகுதியை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் தப்பி ஓடியதும் சிசிடிவி காட்சியின் மூலம் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்