தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல் - குறிப்பிட்ட பகுதியில் மட்டும் முழு ஊரடங்கு

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை போல் மதுரை மாநகரிலும், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல் - குறிப்பிட்ட பகுதியில் மட்டும் முழு ஊரடங்கு
x
மதுரையில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, குறிப்பிட்ட சில இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள், மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பகுதிகள், பரவை பேரூராட்சி ஆகிய இடங்களில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், மருத்துவ சேவைகள் தவிர்த்து எந்த பணிகளும் அனுமதிக்கப்படவில்லை. காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு பகுதிகளில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்