சாத்தான்குளத்தில் போலீசார், வணிகர்கள் நல்லிணக்க கூட்டம் - போலீசார் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வலியுறுத்தல்

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் மற்றும் போலீசார் நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது.
சாத்தான்குளத்தில் போலீசார், வணிகர்கள் நல்லிணக்க கூட்டம் - போலீசார் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வலியுறுத்தல்
x
சாத்தான்குளத்தில் வியாபாரிகள் மற்றும் போலீசார் நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது. வணிகர்களான த‌ந்தை மகன் உயிரிழப்பை தொடர்ந்து சாத்தான்குளத்தில் நிலவி வந்த பதற்றம் மெல்ல மெல்ல தணிய தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஏ.டி.எஸ்.பி குமார் தலைமையில் சாத்தான்குளம் வணிகர் சங்க அலுவலகத்தில்  நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது. அதில் போலீசார் வியாபாரிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. போலீசாரும் இந்த கோரிக்கைக்கு இசைவு தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்