கொரோனா பாதிப்பால் 13 வயது சிறுவன் பலி - அதிக மூச்சு திணறலால் சிறுவன் திடீர் மரணம்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுவன் உயிரிழந்தார்.
கொரோனா பாதிப்பால் 13 வயது சிறுவன் பலி - அதிக மூச்சு திணறலால் சிறுவன் திடீர் மரணம்
x
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் தசை இணைப்பு திசு சிதைவு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனையில், அந்த சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். திடீரென உடல்நிலை மிகவும் மோசமாகி, அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்