கடலூர்: நகை அடகு கடை உரிமையாளரை தாக்கி கொள்ளை

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன்.
கடலூர்: நகை அடகு கடை உரிமையாளரை தாக்கி கொள்ளை
x
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன். நகை அடகு கடை நடத்தி வரும் இவர், தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது,  மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த 5 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை எடுத்துச் சென்றனர். சத்தம் கேட்டு எழுந்த இளவரசனை இரும்பு பைப்பால் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்