கடிதம் எழுதி வைத்துவிட்டு கட்டட ​தொழிலாளி தற்கொலை​ : கனிமொழி நேரில் சென்றுகுடும்பத்தினருக்கு ஆறுதல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி கணேசமூர்த்தி, போலீசார் தன்னை தாக்கியதாக கூறியிருந்தார்.
கடிதம் எழுதி வைத்துவிட்டு கட்டட ​தொழிலாளி தற்கொலை​ :  கனிமொழி நேரில் சென்றுகுடும்பத்தினருக்கு ஆறுதல்
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி கணேசமூர்த்தி, போலீசார் தன்னை தாக்கியதாக கூறியிருந்தார். இதனை, கடிதமாக எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் கணேசமூர்த்தி வீட்டிற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று அவரது மனைவி ராமலட்சுமி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கிய அவர்,  இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்