"மதுரையில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
மதுரையை பொறுத்தவரை கொரோனோ சமூக பரவலாக மாறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மதுரையை பொறுத்தவரை கொரோனோ சமூக பரவலாக மாறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோருடன் கலந்து கொண்ட ஆய்வு கூட்டத்திற்குபின் பேசிய அவர், மதுரையில் தேவையான மருத்துவ கட்டமைப்புகள் உள்ளதாகவும், தேவையான வசதியை செய்ய சுகாதாரத்துறை தயார் என கூறினார். மேலும், சென்னை போன்ற நிலை மதுரையில் ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது, பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது என கூறிய அவர், அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளதாக குறிப்பிடார்.
Next Story