வெளிநாட்டில் இருந்து வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு தொற்று - பரிசோதனை முடிவு தெரியாமல் அனுப்பிய சுகாதார துறையினர்

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு தொற்று - பரிசோதனை முடிவு தெரியாமல் அனுப்பிய சுகாதார துறையினர்
x
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவட்டார் அருகே குலசேகரம் - செறுதிக்கோணம் பகுதியை சேர்ந்த அவர், குவைத்தில் இருந்து, தனது மூன்று வயது குழந்தையுடன் சொந்த ஊர் திரும்பியுள்ளார். திருவனந்தபுரம் வழியாக வந்த அவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், முதல்கட்ட சோதனையில் தொற்று இல்லை என்பதால், இரண்டாம் கட்ட சோதனைக்குப் பின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், அவர்களுக்கு தொற்று உறுதியானதாக கூறி, சுகாதாரத் துறையினர் மீண்டும் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்