மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மீண்டும் ஆலோசனை

வருகிற 30 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.
மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மீண்டும் ஆலோசனை
x
வருகிற 30 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.  இதில் மருத்துவ நிபுணர் குழுவினர் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை குறித்து முதலமைச்சரிடம் விரிவாக எடுத்துரைக்க உள்ளனர். மேலும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்