கொரோனா நோயாளி மீது வழக்கு பதிவு - பொது வெளியில் சுற்றியதாக புகார்

சென்னையில் இருந்து சிதம்பரம் அருகேயுள்ள பு.உடையூர் கிராமத்திற்கு சென்ற நபருக்கு கொரோனா பரிசோதனை செய்த சுகாதாரத்துறையினர் அவரை தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா நோயாளி மீது வழக்கு பதிவு - பொது வெளியில் சுற்றியதாக புகார்
x
சென்னையில் இருந்து சிதம்பரம் அருகேயுள்ள பு.உடையூர் கிராமத்திற்கு சென்ற நபருக்கு கொரோனா பரிசோதனை செய்த சுகாதாரத்துறையினர் அவரை தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் பொது வெளியில் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு கொரோனோ உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தனிமையில் இல்லாமல் வெளியே சுற்றியதாக அவர் மீது கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்