வட்டித் தொழில் செய்து வருபவர் கடத்தல் - 50 பேரிடம் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே, வட்டித்தொழில் செய்து வருபவரை மிளகாய்ப்பொடி தூவி கடத்திய கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
வட்டித் தொழில் செய்து வருபவர் கடத்தல் - 50 பேரிடம் விசாரணை
x
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே, வட்டித்தொழில் செய்து வருபவரை மிளகாய்ப்பொடி தூவி கடத்திய கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
தவமணி என்பவர் கடத்தப்பட்ட  நிலையில், இது குறித்து கந்தர்வ கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, போலீசார் 4 தனிப்படைகள் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கடத்தப்பட்ட தவமணியின் தொலைபேசியில் இருந்து, அவரது மகளுக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில், இதுவரை 50 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்