சென்னையில் கொரோனா தொற்றுக்கு 1,005 போலீசார் பாதிப்பு - 410 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பினர்
தமிழகம் முழுவதும், ஆயிரத்து 500 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகர காவல் துறையில் ஆயிரத்து 5 பேர் பாதிக்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும், ஆயிரத்து 500 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகர காவல் துறையில் ஆயிரத்து 5 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், 410 பேர் இதுவரை குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர். இதே போல் துறைமுக சரக உதவி ஆணையர் கொடி லிங்கம் உட்பட 10 பேர் பணிக்கு திரும்பி உள்ளனர். தொடர்ந்து பணிகளில் இருப்பவர்களுக்கு போதுமான பாதுகாப்புடன் பணிப்புரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story