அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் வாகன ஓட்டுனருக்கு கொரோனா - பாதி வழியில் இறங்கி மாற்று வாகனத்திற்கு மாறிய அமைச்சர்

ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் வாகன ஓட்டுனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் வாகன ஓட்டுனருக்கு கொரோனா - பாதி வழியில் இறங்கி மாற்று வாகனத்திற்கு மாறிய அமைச்சர்
x
ஆரணி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், இந்து சமய அறநிலை துறை அமைச்சருமான சேவூர் ராமசந்திரன், திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது ஓட்டுநருடன் ஆரணிக்கு காரில் திரும்பியுள்ளார். அப்போது பாதி வழியிலேயே அவரது ஓட்டுனருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அமைச்சர் பாதி வழியிலேயே இறங்கி மாற்று  வாகனத்தில் ஆரணிக்கு சென்றார். ஆரணியில் கோட்டாச்சியர், வட்டாச்சியர் மற்றும் ஆரணி நகர காவல் நிலையம் உள்ளிட்ட அலுவலங்களில் ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு, அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆரணி சட்டமன்ற அலுவலகம், பயணியர் விடுதி உள்ளிட்டவையும் தற்போது மூடப்பட்டுள்ளன

Next Story

மேலும் செய்திகள்