பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் மீதான நடவடிக்கை என்ன? - தமிழக அரசிடம் அறிக்கை கேட்பு
தமிழகத்தில் தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அபாராதம் விதித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் சமூக ஆர்வலர் ரூபன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தமிழகத்தில் தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அபாராதம் விதித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் சமூக ஆர்வலர் ரூபன் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர்கள், தடையை மீறி பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை இரண்டு மாதத்திற்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு விசாரணையை செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Next Story