வீழும் வைரஸ்.. மீளும் தண்டையார்பேட்டை

சென்னை தண்டையார்பேட்டையில், தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது சென்னைவாசிகளிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
வீழும் வைரஸ்.. மீளும் தண்டையார்பேட்டை
x
சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினந்தோறும் குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையில் தண்டையார்பேட்டை மண்டலம், தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த மூன்று வாரத்தில் 25 ஆம் தேதியான நேற்று, இதுவரை இல்லாத வகையில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்து 891 ஆக குறைந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 553 ஆக இருந்தது. நேற்று முன் தினம், அதாவது 24 ஆம் தேதி, கொரோனா தொற்று பாதிப்பு 2,373 ஆக இருந்தது. அதே சமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,896 ஆக இருந்தது. கடந்த 23 ஆம் தேதியன்று தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனாவால் குணமடைந்தவர் எண்ணிக்கை, 2,796 ஆகவும், பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,347 ஆகவும் இருந்தது. இது குறித்து சமூக வலைத்தளமான டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கடந்த 3 வாரங்களில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை படிபடியாக குறைந்து ஐந்தாவது இடத்திற்கு செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தொற்று எண்ணிக்கை குறைவுக்கு, அங்கு இரவு பகலாக பணியாற்றி வரும் மருத்துவ குழுவிற்கு, பாராட்டுக்களை  தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்