சென்னையில் 59 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்
சென்னையில் 59 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் ஆயிரத்தை தாண்டியே பதிவாகி கொண்டு வருகிறது. சென்னையில் இதுவரை 47 ஆயிரத்து 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், குணமடையும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. சென்னையில் இதுவரை 27 ஆயிரத்து 986 பேர் குணம் அடைந்துள்ளனர். அதாவது மொத்த பாதிப்பில் 59 புள்ளி 03 சதவீதம் பேர் குணம் அடைந்து உள்ளனர். சென்னையில் இதுவரை 694 பேர் உயிரிழந்துள்ளனர். இது மொத்த பாதிப்பில் 1.5 சதவீதம் ஆகும். 18 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது மொத்த பாதிப்பில், 39 புள்ளி 5சதவீதம் ஆகும்..
Next Story