சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவம் : வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்...

தஞ்சையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவம் : வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்...
x
புதுக்கோட்டையில்  50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து மருந்து கடைகளும் காலை 7 மணி முதல் 11 மணி வரை அடைக்கப்பட்டன. இருப்பினும் காய்கறி கடைகள் மற்றும் காய்கறி சந்தைகள் வழக்கம் போல் இயங்கின

இதைப்போல் சேலத்தில் 25 ஆயிரம் மளிகை கடைகள் மூடப்பட்டுள்ளன. இன்று 4 மணி நேரம் மருந்தக வணிகர்கள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு 2 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மதுரையில் 80 சதவீத கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டிருந்தன. மருந்துகடைகள் காலை 7மணி முதல் 11மணிவரை அடைக்கப்பட்டிருந்தன.  பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்