கள்ளக் காதலுக்கு இடையூறு- கணவனை கொன்ற மனைவி

சேலம் அருகே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி மற்றும் கள்ளக் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக் காதலுக்கு இடையூறு- கணவனை கொன்ற மனைவி
x
சேலம் அருகே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி மற்றும் கள்ளக் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். செஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜகிரி, பூங்கொடி தம்பதி கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்தனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு மனைவியை சமாதானம் செய்து ராஜகிரி அழைத்து வந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன் பின் கணவர் மாயமானார். ஒருவாரத்துக்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறிய பூங்கொடி, வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த உறவினர்களின் புகாரின் பேரில் போலீசார் விசாரித்ததில், பூங்கொடி கணவரை கொன்று புதைத்தது தெரியவந்தது. தகராறு அன்றே கணவரை கொலை செய்து புதைத்துவிட்டு ஒருவாரம் தங்கியிருந்த பின் வெளியேறிய மனைவி பூங்கொடி, மற்றும் கள்ளக் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்