"விவசாயிகளின் வேதனை குரல் முதலமைச்சர் காதுகளில் எட்டுமா?" - திமுக தலைவர் ஸ்டாலின்

துன்பத்திலும், துயரத்திலும் வாடும் விவசாயிகளின் வேதனைக் குரல் முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டுமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயிகளின் வேதனை குரல் முதலமைச்சர் காதுகளில் எட்டுமா? - திமுக தலைவர் ஸ்டாலின்
x
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடைமடைப் பகுதிக்கும் காவிரி நீர் செல்வதற்கு, தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்தவும், விவசாயிகளுக்குத் தேவையான கடன் உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைப்பதற்கும்  உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் "விவசாயிகள் நீரேற்று சங்கம்" என்ற பெயரில் கிணறு வெட்டி- நீர்ப் பாசன வசதி செய்வதற்கு ஒரு விவசாயிக்கு ஒன்னேகால் லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்