கடைமடை கதவணையை சீர் செய்து தர கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த எடமணல் கிராமத்தில் பொறை வாய்க்காலில் 60 ஆண்டுகள் பழமையான கடைமடை கதவணை, போதிய பராமரிப்பு இன்றி சிதைந்து விட்டதால் கடல் நீர் புகுந்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த எடமணல் கிராமத்தில் பொறை வாய்க்காலில் 60 ஆண்டுகள் பழமையான கடைமடை கதவணை, போதிய பராமரிப்பு இன்றி சிதைந்து விட்டதால் கடல் நீர் புகுந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கபட்டு, 500 ஏக்கர் விளைநிலங்கள் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் போர்க்கால அடிப்படையில் கதவணை சீரமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story