கமலை ஈர்த்த பாகனேரி கலைஞரின் நாதஸ்வர இசை - கருவறை விட்டுவந்து கடவுளே காதலிக்கட்டும் என உருக்கம்

சிவகங்கை மாவட்டம் பாகனேரி நாதஸ்வரக் கலைஞர் கே. பில்லப்பனின் தோள் சாய்ந்து கடவுள் காதலிக்கட்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கமலை ஈர்த்த பாகனேரி கலைஞரின் நாதஸ்வர இசை - கருவறை விட்டுவந்து கடவுளே காதலிக்கட்டும் என உருக்கம்
x
சிவகங்கை மாவட்டம் பாகனேரி நாதஸ்வரக் கலைஞர் கே. பில்லப்பனின் தோள் சாய்ந்து, கடவுள் காதலிக்கட்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றில், தனிநபராக பில்லப்பன் வாசித்த நாதஸ்வரம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதை கேட்ட பலரும், இசையில் லயித்து பாராட்டி வருகின்றனர். இதை தொடர்ந்து, பக்தன் ஒருவன் தன் கடவுளை இசையால், குளிப்பாட்டுவதாக தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ள கமல்ஹாசன், இதைப்போன்ற பல மகாகவிகளின் கலைகள் கேட்பாரற்று மரணித்துவிடுவதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்