ஒன்றரை வயது பெண் குழந்தை விற்பனை - ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்த தாய்
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் ஒன்றை வயது குழந்தையை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் ஒன்றை வயது குழந்தையை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கணபதி - ரோஸ்லின் தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மனைவியை சந்திக்க வந்த கணபதி தனது ஒன்றரை வயது குழந்தை குறித்து கேட்டபோது, மர்ம நபர்கள் கடத்தி சென்று விட்டதாக ரோஸ்லின் கூறியுள்ளார். இதையடுத்து மனைவியை காவல்நிலையம் அழைத்து சென்று கணபதி வழக்கு கொடுத்துள்ளார். விசாரணையில், ரோஸ்லின் குழந்தையை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது தெரிய வந்தது. இதையடுத்து ரோஸ்லின் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர் .
Next Story