தண்ணீர் தொட்டியில் மூழ்கி தந்தை, மகள் உயிரிழப்பு - நீச்சல் கற்று தந்த போது நிகழ்ந்த சோகம்

ஓசூர் அருகே நீச்சல் கற்று தந்த போது, தண்ணீர் தொட்டியில் மூழ்கி தந்தை, மகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீர் தொட்டியில் மூழ்கி தந்தை, மகள் உயிரிழப்பு - நீச்சல் கற்று தந்த போது நிகழ்ந்த சோகம்
x
ஓசூர் அருகே நீச்சல் கற்று தந்த போது, தண்ணீர் தொட்டியில் மூழ்கி தந்தை, மகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிந்தல்தொட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரசாத், அவரது நிலத்தில் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்துள்ளார். அதில் தனது 10 வயதான மகள் சைலஜாவிற்கு நீச்சல் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சைலஜா தண்ணீருக்குள் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற சென்ற பிரசாத்தும் தண்ணீரில் மூழ்கினார். இதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்