கொரோனாவை தடுக்கும் எதிர்ப்பு சக்திக்கு மருந்து - ஆய்வு செய்ய உத்தரவிடுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு

சித்தா, ஹோமியோபதி, அலோபதி உள்ளிட்ட அனைத்து மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனாவை தடுக்கும் எதிர்ப்பு சக்திக்கு மருந்து - ஆய்வு செய்ய உத்தரவிடுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
x
மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொரோனாவை தடுக்க எதிர்ப்பு சக்தியை , அதிகரிக்கும் பொடி ஒன்றை தயாரித்து இருப்பதாகவும், இதனை வைராலஜி நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளை தருவிக்க , ஆயுஷ் அமைச்சகத்தின் செயலருக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார். இந்த மனு,  நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு,  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழக அரசு சித்தா,  அலோபதி உள்ளிட்ட  மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைக்கவும், அந்த குழுவின் முன்பாக சித்த மருத்துவர் ஜூன் 26ம் தேதி நேரில் ஆஜராகி, இம்ப்ரோ மருந்து குறித்த விபரங்கள், தரவுகளை அளிக்கவும், உத்தரவிட்டனர். பின்னர், அதனை மருத்துவ நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கையை ஜூன் 30 ந்தேதி, தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்