ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல் இன்று பிரேத பரிசோதனை - அரசு மருத்துவமனையில் நீதிபதி நேரில் விசாரணை

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனை போலீசார் அடித்து கொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து கோவில்பட்டி ஜே.எம் எண் 1 நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல் இன்று பிரேத பரிசோதனை - அரசு மருத்துவமனையில் நீதிபதி நேரில் விசாரணை
x
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனை போலீசார் அடித்து கொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவர்கள் உடல் வைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில்,  கோவில்பட்டி ஜே.எம் எண் 1 நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, மருத்துவர்களுடனும் ஆலோசனை நடத்தினர். பின்னர் நீதிபதி முன்னிலையில் இருவரது உடலும் உடற்கூறு ஆய்வு செய்ய  மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். இந்நிலையில், உயர்நீதிமன்றம், உடற்கூறு ஆய்வு செய்ய சில வழிமுறைகள் தெரிவித்ததை தொடர்ந்து, ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்கள் இன்று உடற்கூறு பரிசோதனை செய்யப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்