சென்னையை தாண்டி மாவட்டங்களில் தீவிரமடையும் கொரோனா - முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை

சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
சென்னையை தாண்டி மாவட்டங்களில் தீவிரமடையும் கொரோனா - முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை
x
சென்னையில் விஸ்வரூம் எடுத்து வரும் கொரோனா கடந்த சில நாட்களாக மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தை தொடர்ந்து மதுரை, தேனியில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாகவும் முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்