குணமடைந்து பணிக்கு திரும்பிய 41 ரயில்வே பாதுகாப்பு படையினர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 41 ரயில்வே பாதுகாப்பு படையினர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 41 ரயில்வே பாதுகாப்பு படையினர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். சென்னை சென்ட்ரலில் உள்ள புறநகர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், ரயில்வே பாதுகாப்பு படையின் ஐ.ஜி. பிரேந்திர குமார் பூங்கொத்து கொடுத்து அவர்களை வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, சென்னை கோட்ட ரயில்வே முதன்மை ஆணையர் செந்தில்குமார், கொரோனா தொற்றால் இதுவரை 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 41 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், இஞ்சி சாறு, போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய அனைத்தும் வழங்கி ரயில்வே பாதுகாப்பு படையினரை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.
Next Story