செஞ்சியை கலக்கும் கல்யாண மன்னன் - அடுத்தடுத்து 3 பெண்களை மணமுடித்த பலே ஆசாமி

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அடுத்தடுத்து 3 பெண்களை மனைவியாக்கி கல்யாண மன்னனாக உலா வருகிறார்
செஞ்சியை கலக்கும் கல்யாண மன்னன் - அடுத்தடுத்து 3 பெண்களை மணமுடித்த பலே ஆசாமி
x
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த துத்திப்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். 30 வயதான இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன் அதே ஊரை சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. சில மாதங்கள் மட்டுமே மனைவியுடன் குடும்பம் நடத்திய வெங்கடேசன், 8 மாத கர்ப்பமாக உள்ள தன் மனைவியை உதறிவிட்டு கோவைக்கு நடையை கட்டினார் அவர். 

பின்னர் கோவைக்கு சென்ற வெங்கடேசன், அங்கே நந்தினி என்ற பெண்ணை காதலித்து ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்துள்ளார். வேலை பார்த்துக் கொண்டே படித்து வந்த நந்தினியுடன் 4 ஆண்டு காலம் குடும்பம் நடத்தியுள்ளார் வெங்கடேசன். பின்னர் அவருடனான வாழ்க்கையும் ஒரு கட்டத்தில் கசந்து போகவே அங்கிருந்து தன் ஜாகையை சென்னைக்கு மாற்றியிருக்கிறார். தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக பந்தா காட்டி செவிலியரான பெண்ணை தன் வலையில் விழ வைத்துள்ளார் வெங்கடேசன். கோவிலம்பாக்கம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த அந்த காளீஸ்வரி என்ற அவரை காதலித்து 3வதாக திருமணம் செய்தார் வெங்கடேசன். இதெல்லாம் முதல் மனைவியான வெண்ணிலாவுக்கு தெரியவரவே அதிர்ந்து போனார் அவர். 

3வது மனைவியான காளீஸ்வரியை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியிருக்கிறார் முதல் மனைவியான வெண்ணிலா. ஆனால் அவர் சொன்னதை எல்லாம் நம்பாமல் வாழ்ந்தால் வெங்கடேசனுடன் தான் என பிடிவாதமாக இருந்துள்ளார் காளீஸ்வரி. தன் கணவரின் இந்த மோசடித்தனத்தால் அதிர்ந்து போன வெண்ணிலா, செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மாற்றுத் திறனாளியான பெண் பிள்ளையை கையில் சுமந்து கொண்டு தன் வாழ்க்கைக்கு நியாயம் கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார் வெண்ணிலா


Next Story

மேலும் செய்திகள்