முதலமைச்சர் பழனிசாமி 26ஆம் தேதி திருச்சி பயணம் - குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் வரும் 26ம் தேதி திருச்சி செல்ல உள்ளார்.
திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்யும் அவர், பல்வேறு நலத்திட்ட பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. காவிரி நீர் கடைமடை பகுதி வரை தடையின்றி விரைவாக செல்லும் வகையில், திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் குடிமராமத்து பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story