13 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை - சென்னையில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

சென்னையில் பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை - சென்னையில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
x
சென்னையில் பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதற்கட்டமாக 13 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், 6 பேருக்கு அண்மையில் எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மீதமுள்ள 7 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும்,  ஓரிரு நாளில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்