"தென்மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு" - நடவடிக்கை எடுக்க எம்பி வெங்கடேசன் வலியுறுத்தல்

தென் மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, இராமநாதபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகரித்துள்ளது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தென்மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - நடவடிக்கை எடுக்க எம்பி வெங்கடேசன் வலியுறுத்தல்
x
தென் மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, இராமநாதபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகரித்துள்ளது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள்  வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மாவட்டங்களில்
அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா நோய்தொற்றின் வேகம் மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து 
தென் மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரியை நியமிக்க கோரியும், கொரோனா  பாதிப்பைக் கட்டுப்படுத்த திட்டமிட்டவும் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்