விக்ரமன் தலைப்பிற்கு வந்த காவிரி நீர் - சிறப்பு பூஜைக்கு பிறகு, தண்ணீர் திறப்பு
மயிலாடுதுறை அடுத்த திருவாலங்காடு விக்ரமன் தலைப்பிற்கு வந்த காவிரி நீரில், மலர்தூவி மக்கள் வரவேற்றனர்.
மயிலாடுதுறை அடுத்த திருவாலங்காடு விக்ரமன் தலைப்பிற்கு வந்த காவிரி நீரில், மலர்தூவி மக்கள் வரவேற்றனர். சிறப்பு பூஜைக்கு பிறகு, நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்கட்டமாக 712 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும், இன்னும் ஓரிரு தினங்களில், பாசனத்திற்காக தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காவிரி மற்றும் கிளை ஆறுகள் மூலம் மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
Next Story