கல்லூரியில் தங்க வைக்கப்பட்ட மக்கள் - அடிப்படை வசதிகள் இல்லை என உண்ணாவிரத போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்கள் தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்ட மக்கள் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரியில் தங்க வைக்கப்பட்ட மக்கள் - அடிப்படை வசதிகள் இல்லை என உண்ணாவிரத போராட்டம்
x
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்கள் தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்ட மக்கள் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து சொந்த ஊர் நோக்கி வந்த 100க்கும்  மேற்பட்ட பொதுமக்கள்,  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெண்கள் தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டனர். வந்து 5 நாட்களாகியும் இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவில்லையெனவும், எந்தவித அடிப்படை வசதிகளும்  இல்லை எனவும் குற்றம் சாட்டிய அவர்கள், இரவு முதல் உணவு உண்ணாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்