"இணைய வழி கல்வி - நிழல் நிஜமாகிவிடாது" - திமுக தலைவர் ஸ்டாலின்

இணையவழி கல்விமுறை நிச்சயமாக வகுப்பறை கல்விக்கு மாற்று இல்லை என்றும் நிழல் நிஜமாகிவிடாது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இணைய வழி கல்வி - நிழல் நிஜமாகிவிடாது - திமுக தலைவர் ஸ்டாலின்
x
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இணையவழி வகுப்பு நடத்துவதற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள அ.தி.மு.க. அரசு, 

* திரைமறைவில் அந்த வகுப்புகளை தாராளமாக அனுமதித்துள்ளது என்றும், 

*மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி, மனம் போன போக்கில் விளையாடும் அ.தி.மு.க. அரசின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கிராம பகுதிகளில் உள்ள மாணவர்கள் இணைய வழி கல்வியை பெற தேவையான உள்கட்டமைப்பு இல்லை என்று தெரிவித்துள்ள ஸ்டாலின்,

*ஆசிரியரிடம் நேரடியாக கேள்வி கேட்டு கலந்துரையாடாமல், கல்வியை கற்று கொள்வது சிரமம் என்றும் தெரிவித்துள்ளார். 

*கல்வி என்பது கற்றறிய வேண்டியது என்று என்பதையும், அது பங்குச்சந்தை வியாபாரம் போன்றதும் அல்ல என்பதையும்

*மத்திய - மாநில அரசுகள் உணர வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். 

*மேலும், இணைய வழி கல்வியால் மாணவர்களின் உடல்நிலை பாதிப்படைவதோடு, 

*தேவையில்லாத மன அழுத்தத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

* 'நேரடியாகக் கற்றல் - கற்பித்தல்' என்ற வகுப்பறை சூழல் மட்டுமே கல்வி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், 

*இணையவழிக்கல்வி முறை, நிச்சயமாக வகுப்பறை கல்விக்கு மாற்று இல்லை என்றும் நிழல் நிஜமாகிவிடாது என்றும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்