மின்வாரியத்தின் உத்திரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

மின்சார அளவு கணக்கீடு செய்வது குறித்து மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்கதமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மின்வாரியத்தின் உத்திரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
x
ஊரடங்கு காரணமாக மின் கணக்கீடு செய்யாததால், மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும் போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்து விட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளை பின்பற்றியே கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக தமிழக அரசுதரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்