போலியாக பதிவு சான்றிதழ் தயாரிப்பு - அரசு அலுவலக ஊழியர்கள் 3 பேர் கைது
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பழைய வாகனங்களுக்கு போலியாக பதிவு சான்றிதழ் தயாரித்த மூன்றுபேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவேரி நகரில் இயங்கி வரும் திருவெறும்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக இருந்த சுந்தரராமனின் அனுமதி இல்லாமல் 2 இன்னோவா கார்களுக்கு பதிவு சான்றிதழ் தயாரிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சிசிடிவி கேமிரா காட்சி ஆய்வு செய்த போது, தற்காலிக ஊழியரான அமலன் அன்புச்செல்வன் பல்வேறு தேதிகளில் சில கோப்புகளின் பக்கங்களை கிழித்துச் செல்வது தெரியவந்தது. மேலும் இவர் 2 பழைய இன்னோவா கார்களுக்கு பதிவு சான்றிதழ் போலியாக தயார் செய்து கொடுத்ததும் தெரியவந்தது. அதனடிப்படையில் சுந்தரராமன் கொடுத்த புகாரின் பேரில் அமலன் அன்பு செல்வன், பாலசுப்ரமணியன், மற்றும் சுந்தரமூர்த்தி ஆகிய 3 பேர் மீது நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Next Story