காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை - கொரோனா தொற்றை குறைக்க நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளே போலீசார் யாரையும் அனுமதிக்காததால் மீன் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை - கொரோனா தொற்றை குறைக்க நடவடிக்கை
x
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளே போலீசார், யாரையும் அனுமதிக்காததால்,மீன் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அங்கு மீன் விற்பனை செய்ய காலை 6மணி முதல் காலை 10மணி வரை மட்டும் அனுமதிக்கப்பட உள்ளது. எனவே முன்னதாக மீன் வாங்க வந்தவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கமால் தடுத்து நிறுத்தி வருகின்றனர். முதலில் மொத்த வியாபாரிகள் பிறகு சில்லரை வியாபாரிகள் அனுமதிக்கப்படுவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.கொரனோ தொற்றை குறைக்கும் வகையில், சமூக இடைவெளியோசு, மாஸ்க் அணிந்திருந்தால் 
மட்டும் உள்ளே அனுமதி என காவல்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்