மதுரை : கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 4 அடி நீள முதலை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே விவசாய கிணற்றிலிருந்து சுமார் 4 அடி நீள முதலை மீட்கப்பட்டது.
மதுரை : கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 4 அடி நீள முதலை
x
மதுரை மாவட்டம்  மேலூர் அருகே விவசாய கிணற்றிலிருந்து சுமார் 4 அடி நீள முதலை மீட்கப்பட்டது.  வண்ணாம்பாறை பட்டியில் முருகன் என்பவரின் கிணற்றில் மீன் பிடிப்பதற்காக வலை போடப்பட்டது.  அப்போது மீன்களுடன் சேர்ந்து சுமார் 4 அடி நீளமுள்ள முதலை ஒன்றும் வலையில் சிக்கியது. இதனையடுத்து அதனை லாவகமாக பிடித்த விவசாயிகள், டிராக்டரில் வைத்து பாதுகாத்தனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முதலை ஒப்படைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்